சிறந்த தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்கி, அதன் வாயிலாக கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மிகத்துடன் பொதிந்த அறிவார்ந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்குதல்.
பல்வகைப்பட்ட பாடத்திட்டங்கள், மதிப்பு அடிப்படையிலானகல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத் திட்டங்கள் ஆகியவற்றை மேற்கொள்வதன் வழியாக சமூகத்தின் நல்லிணக்கத்திற்கும், சமுதாய வளர்ச்சிக்கும் வித்திடல்.
மாணவர்களிடம் புதுமையான படைப்பாற்றலை ஊக்குவித்து, அவர்களின் சமூகக் கடமை மற்றும் பொறுப்புகளை உணரச்செய்தல்.கிராமப்புற மாணவர்களுக்குச் சிறந்த மற்றும் தரமான உயர்கல்வியைப் புகட்டி, அவர்களை மேம்படுத்துதல். இதன் வழியாக அறிவார்ந்த, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குதல்