College Header
PRC
முனைவர் ஞா.ஜோதி

மூத்த துணைமுதல்வர்

இக்கல்விக் கோவிலில் 2002 ஆம் ஆண்டு முதல் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு அளவற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் கல்லூரியானது, இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி நிலைகளில் தரமான கல்வியை வழங்கும் நிறுவனங்களுள் முதன்மையான ஒன்றாகும். எங்களின் உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரிய, மாணவர் மற்றும் பணியாளர் ஆதரவு அமைப்புகள், நவீன கற்றல் சாதனங்கள்,கல்வி கற்கும் சூழல் ஆகியவை எங்கள் மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

எங்கள் பாடத்திட்டங்களும் ,தேர்வு நடைமுறைகளும் மாணவர்களின் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவுத்திறன் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கும் நோக்கில் அமைகிறது.

எம் நிறுவனத்தில் SRRCARS எனும் மையப்படுத்தப்பட்ட ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது.மற்றும் நவீன சாதனங்கள் பொருத்தப்பட்ட ஆய்வக வசதிகளும் உள்ளன, இது அறிவியல் மாணவர்களிடையே ஆய்வுத்திறனை மேம்படுத்துகிறது.

மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பாடத்திட்டம் சார்ந்த மற்றும் சாராத செயல்பாடுகளில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். மாணவர்கள் கல்வியறிவுடன் சமூகப் பொறுப்புள்ள குடிமகன்களாக திகழ்வதற்கு உரிய நெறிமுறைகள் அறிவுறுத்தப்படுகின்றன. ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகளின் ஆசியுடன், அனைத்து மாணவர்களும் ஒளிமயமான எதிர்காலம் பெற்று வாழ்வில் உயர்வடைய வாழ்த்துகிறேன்.