கல்லூரி முதல்வர்
எங்கள் கல்லூரி வெற்றிகரமாக வெள்ளி விழாவைக் கண்டுள்ளது.அதற்கு அயராது உழைத்த எங்கள் நிறுவனத்தின் ஒவ்வொரு அங்கத்தவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகளின் அனுக்கிரகத்தாலும், நிறுவனத்தாரின் அயராத முயற்சியாலும், மாநிலத்தின் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்றாக நாங்கள் உருவெடுத்துள்ளோம்.
இந்நிறுவனம் தனது கல்விசார் சிறப்பு, கற்றல் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி ஆகிய அனைத்து நிலைகளிலும் உயர்ந்த சிகரங்களை நோக்கி அணிவகுத்துச் செல்கிறது.
கல்விக் கொள்கை, மாணவர்களின் முன்னேற்றம் ஆகியவை தேசிய வளர்ச்சியின் குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்படுகின்றது. தேசிய கல்விக் கொள்கையின்படி கல்வித்தரத்தை மேம்படுத்துதல், ஆராய்ச்சியை ஊக்குவித்தல், ஆசிரியர்களின் திறன்களை அதிகப்படுத்துதல், கற்றல் வசதிகளை சமமாக விரிவுபடுத்துதல், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் எங்கள் நிறுவனம் தீர்மானமாகக் கொண்டுள்ளது. இந்தியக் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டினைப் பாதுகாப்பதில் நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம்.இளைய தலைமுறையினருக்கு நல்லதொரு வழிகாட்டியாக கலங்கரைவிளக்கு போல திகழ்வதில் பெருமை கொள்கிறோம்.
இச்சீரிய கல்விப் பயணத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் உளமாற மகிழ்ச்சியடைகிறேன். நன்றி!