பசுமை வளாகத் திட்டம் கல்லூரியின் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. பல்வேறு பசுமை வளாகத் திட்டம் தொடர்புடைய செயல்பாடுகளுக்குச் சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இவற்றின் கீழ் உள்ள திட்டங்கள் ஆசிரியர்கள், மாணவர்களைக் கொண்ட பசுமைத் தணிக்கைக் குழுவால் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கு உகந்த வளாகத்தை உருவாக்கி பராமரிப்பது, மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடையே சுற்றுச்சூழல் நட்பு மனப்பான்மையை வளர்ப்பது தணிக்கைக் குழுவின் நோக்கம் ஆகும். தணிக்கை பின்வரும் நோக்கங்களை உள்ளடக்கியது.
பொதுத் தலைப்புகளில் ஆய்வு வட்டக் கூட்டம் அவ்வப்போது துறைகளில் நடத்தப்படுகின்றன. இது ஆசிரியர்களிடையே நட்புறவை வளர்க்கவும் பல்வேறு தலைப்புகளில் அவர்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது.
அறிவைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக அந்தந்தத் துறைகளில் அறிவார்ந்த தலைப்புகளில் ஆராய்ச்சி கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
கல்லூரியில் இயங்கும் துறைகள் ஒவ்வொரு மாதமும் தத்தம் அறிக்கையை சமர்ப்பிக்கின்றன, இது முற்போக்கான, தரமான மேம்பாடுகளை உள்ளடக்கியதாகும்.
கல்லூரியில் மாணவர்களுக்கான முழுசேர்க்கை முறையும் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட சேர்க்கைத்தளம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
விரிவான ஆய்வகக் கையேடு கல்லூரியால் வடிவமைக்கப்பட்டுள்ளது.இது மாணவர்கள் சிறப்பாகச் செயல்படவும் அவர்களின் சோதனைத் திறனை மேம்படுத்தவும் உதவும்.
மத்திய அரசின் ஆத்மநிர்பர் பாரத் முன்முயற்சிக்கு இணங்க, ஒவ்வொரு துறையும் மாணவர்களிடையே சுயதொழில் திறனை , தொழில் முனைவோர் திட்டத்தில் ஈடுபட ஊக்குவிக்கிறது. அத்தகைய முயற்சிகளுள் சில..
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாணவர்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு, தின்பண்டங்கள், கலை மற்றும் கைவினைப் பொருட்களை விற்பனைக்குக் காட்சிப்படுத்துகிறார்கள். இது மாணவர்களைச் சுயதொழில் செய்ய ஊக்குவித்து, அவர்களின் தொழில் முனைவுத் திறனை மேம்படுத்துகிறது.
கல்லூரியில் ஒவ்வொரு துறையிலும் நவீன தொழில்நுட்ப கருவிகள் கொண்ட வகுப்பறைகள் உள்ளன.