கல்லூரியானது நிர்வாக வளாகம், முதன்மை வளாகம், கணினி வளாகம், கலை வளாகம், நூலக வளாகம் மற்றும் கலையரங்கம் ஆகிய 6 பெரிய கட்டிட வளாகங்களை உள்ளடக்கியது.
நிர்வாக வளாகத்தில் செயலர் மற்றும் தாளாளர், முதல்வர், உள்தரக்கட்டுப்பாட்டு மையம் மற்றும் வேலை வாய்ப்பு மையம் ஆகியவை செயல்படுகின்றன. இந்நிர்வாக வளாகத்தில் அலுவலகப் பணிக் கூட்டங்களுக்காக ஸ்ரீ வேதாந்த ராமானுஜ மஹாதேசிகன் அறையையும், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு 350 பேர் அமரும் வசதியுடன் கூடிய குளிரூட்டப்பட்ட ஒலி ஒளி அரங்கத்தையும் (ஸ்ரீ வராஹ மஹாதேசிகன் அரங்கம்) கொண்டுள்ளது.
முதன்மை வளாகத்தில் ஆசிரியர் அறைகள், இயற்பியல், வேதியியல், உயிர் வேதியியல், உயிர்த்தொழில்நுட்பவியல் மற்றும் நுண்ணுயிரியல் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் துறைகளின் அதிநவீன உபகரணங்களுடன் கூடிய ஆய்வகங்களும், ஒளிப்படகாட்சியுடன் கூடிய வகுப்பறைகளும் உள்ளன. மேலும் ஒருங்கிணைந்த அதிநவீன ஆராய்ச்சி மையமும் (SRRCARS) செயல்படுகிறது.
கணினி வளாகத்தில் கணினி அறிவியல் துறை, நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட வகுப்பறைகள், ஆசிரியர் அறைகள், நவீன புகைப்பட ஸ்டுடியோ, ஒளி அமைப்புகள், ஒலிப்பதிவு அறை, நவீன வீடியோ கேமராக்கள் மற்றும் மல்டி மீடியா வசதிகளுடன் கூடிய காட்சி ஊடகத் துறையும் உள்ளது.
கலை வளாகமானது, வணிகவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை, வங்கி மேலாண்மைத் துறை, சமூகப்பணித்துறை மற்றும் தமிழ்த்துறைக்கான நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வகுப்பறைகளைக் கொண்டுள்ளது.
நூலகத்தில் 36,763 புத்தகங்கள் உள்ளன. 7 பன்னாட்டு இதழ்கள், 19 தேசிய இதழ்கள், 5 சந்தாஇதழ்கள், 6 இணைய இதழ்கள் பயன்பாட்டில் உள்ளன. புத்தக வங்கியில் 2192 புத்தகங்கள், 2140 புத்தகம் சாராப் பொருட்கள் மற்றும் 968 புத்தகம்சார் பின்தொகுதிகள், 359 நடமாடும் நூலகப்புத்தகங்கள், 155 அரிய புத்தகங்கள் மற்றும் 191 போட்டித் தேர்வு புத்தகங்கள், 11 தினசரிகள் மற்றும் INFLIBNET மற்றும் BOOK SHRE இல் உறுப்பினர்களுடன் இந்த நூலகம் உள்ளது.