ஸ்ரீமதே வராஹ மஹாதேசிகாய நமஹ!
செயலர் மற்றும் தாளாளர்
அன்புள்ள மாணவர்களே,
ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் 9 வது பீடாதிபதியான ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீமத் வேதாந்த ராமானுஜ மஹாதேசிகன் அருளாலும் ஆஸ்ரம சிஷ்யர்களின் பங்களிப்பினாலும் 1968 ஆம் ஆண்டு ஸ்ரீ ரங்கநாத பாதுகா வித்யாலயா அறக்கட்டளை நிறுவப்பட்டது.
இவ் பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளையின் ஒரு பகுதியாக ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டுவருகிறது. ஆண்டவன் ஸ்வாமிகளின் அருளாசியால் நான் இந்நிறுவனத்தின் செயலர் மற்றும் தாளாளராக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இக்கல்லூரியானது 1996 ஆம் ஆண்டு ஆசிரமத்தின் 11வது பீடாதிபதியான ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ ரங்க ராமானுஜ மகாதேசிகனால், கிராமப்புற சமுதாயத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் நிறைவான உயர்கல்வியை வழங்கும் நோக்குடன் நிறுவப்பட்டது. எங்கள் நிறுவனம் தற்போதைய ஆச்சார்யன், ஆசிரமத்தின் 12வது பீடாதிபதி ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ வராஹ மஹாதேசிகன் அவர்களால் வழிநடத்தப்படுகிறது.
கலாச்சாரம், பண்பாடு மற்றும் ஆன்மிகத்துடன் கூடிய கல்வியறிவினை மாணவர்களுக்கு அளித்து அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதுடன் கிராமப்புற இளைஞர்களின் எதிகாலத்தை மேம்பாடு அடையச்செய்கிறது. நம் கல்லூரியில் பயிலும் மாணவர்களுள் 72% மாணவர்கள் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி அவர்களில் 54% முதல் தலைமுறை மாணவர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களாவர்.அத்தகைய மாணவர்களுக்காக 50 கிலோமீட்டர் சுற்றளவில் 28 பேருந்துகளில் இலவச போக்குவரத்துவசதி வழங்கப்படுகிறது.
இந்நிறுவனம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகளின் அருளாசியுடன் மாணவர்களை நன்னெறியில் செம்மைப்படுத்துவதுடன் மாணவர்களுக்குத் தேவையான அனைத்துச் சலுகைகளையும் வழங்கிவருகிறது. ஆகையால் இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தாம் கற்கும் கல்வியைப் பக்தியுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் பயிலுமாறு நான் வாழ்த்துகிறேன் .