College Header
SECRETARY
முனைவர் .உமா,

தேர்வுக்கட்டுப்பாட்டு நெறியாளர்

திருச்சிராப்பள்ளி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் (தன்னாட்சி), தேர்வு நெறியாளர் அலுவலகத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட, தானியங்கு மற்றும் வெளிப்படையான தேர்வு முறை நடைமுறைகள் மேற்கொள்வது குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இவ் அலுவலகம் வினாத்தாள் அமைப்பிலிருந்து இறுதி மதிப்பீடு வரை, உண்மைத்தன்மையுடன் செயல்படுகிறது. எங்கள் தேர்வு முறையானது, மென்பொருளால் மேம்படுத்தப்பட்டுள்ளது, அனைத்து செயல்பாடுகளும் நெறிப்படுத்தப்பட்டதாகவும் திறமையானதாகவும் திகழ்கிறது . வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப இளநிலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான உள் மதிப்பீடுகளில் டிஜிட்டல் முறைகளை வடிவமைத்துள்ளோம். இம்முறையானது எதிர்காலத்தில் டிஜிட்டல் அடிப்படையிலான போட்டித் தேர்வுகளிலும், எங்கள் மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கான திறன்களையும் நம்பிக்கையையும் வழங்குகிறது. எங்கள் பருவத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் பிற கல்வி நிறுவன நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டு தரப்படுத்தப்படுகின்றன. மேலும் தரப்படுத்தலில் பாரபட்சமற்ற தன்மையையும் துல்லியத்தையும் நிலைநிறுத்துவதற்காக மதிப்பீடு வெளிப்புற தேர்வாளர்களால் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதன் வாயிலாக, கல்லூரியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளதை நினைத்துப் பெருமை கொள்கிறோம் .