காகிதமில்லா கல்வி வளாகமாக மாற்றுவதற்கான கூடுதல் முயற்சியாக, மாணவர்சேர்க்கை செயல்முறை கணினிமயமாக்கப்பட்டுள்ளது. சேர்க்கை செயல்முறையை உடனடியாகவும் எளிதாகவும் செய்ய இணையவழிச்சேர்க்கைக்கான உள்கட்டமைப்பு மென்பொருள் வசதிகளைக் கல்லூரி கொண்டுள்ளது என்பது சிறப்பு வாய்ந்தது.
கல்லூரி நிறுவனரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, எங்கள் கல்லூரி நிர்வாகம் தொடக்கத்தில் இருந்து 2000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதியை வழங்கி வருகிறது. இதன் மூலம் மாணவர்களுக்குக் கற்றலுக்கான நல்ல சூழலை உருவாக்கித் தந்தமை குறிப்பிடத்தக்கது. எம் நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் விடாமுயற்சியுள்ள,திறமையான, தகுதியான மற்றும் தேவைப்படும் மாணவர்களுக்கு CSR மற்றும் நலன் விரும்பிகள் & கொடையாளர்களால் உருவாக்கப்பட்ட வளங்கள் மூலம் பல்வேறு உதவித்தொகைகளை நிதியுதவியாக வழங்கி வருகிறது.
கல்லூரியின் தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலை வாய்ப்புக் குழுவானது ATC எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து அவர்களை வேலைவாய்ப்பிற்கு ஆயத்தப்படுத்துகிறது.
முன்னாள் மாணவர்களிடையே நல்லுறவை வளர்க்கவும் மற்றும் பராமரிக்கவும் ஏதுவாக ஆண்டவன் முன்னாள் மாணவர் சங்கம் (AAA) 2006 ஆம் ஆண்டில் நிறுவப்பெற்றது. அவர்கள் உடனடி நிதி உதவியாளர்களாகவும் கல்லூரியில் நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளின் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டு சிறப்பு பெறுகின்றனர்.
நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகளில் ஒன்று "மாணவர் வழிகாட்டுதல் திட்டம்". வழிகாட்டி மற்றும் மாணவரிடையே ஆரோக்கியமான உறவை வளர்த்து பராமரிக்க, ஒவ்வொரு மாதமும் ஒரு மாணவர் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மாணவர்களின் கல்விசார் மற்றும் சுயவிவரப் பதிவுகளைப் பின்னூட்டமாக வழிகாட்டிகள் பெற்றுக் கொள்கின்றனர். இது மாணவர்களின் சமூக மற்றும் உணர்வுசார் நல்வாழ்வை வளர்க்க உதவுகிறது.
பகடி (ராகிங்) இல்லாத வளாகத்தை பராமரிக்க பகடி (ராகிங்) தடுப்பு குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இக்குழுவின் உறுப்பினர்களாக கல்லூரியின் முதல்வர், துணை முதல்வர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டு நெறியாளர், புலமுதன்மையர்கள், துணைப்பொது மேலாளர், காவல் ஆய்வாளர் - ஸ்ரீரங்கம், வழக்கறிஞர், சமூகப் பிரதிநிதி, பெற்றோர் பிரதிநிதி மற்றும் மாணவர் பிரதிநிதி ஆகியோர் அங்கத்தினர்களாக இருந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள 50 கிலோமீட்டர் சுற்றளவில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவசப் பேருந்து வசதியைக் கல்லூரி வழங்குகிறது. இதற்காக 28 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தச் சேவையை வழங்குவதற்கான செலவு, நன்கொடையாளர்கள் மற்றும் CSR நிதியில் இருந்து பெறப்படுகிறது.