College Header



ஆச்சார்யன் ஸ்ரீவேதாந்த ராமானுஜ மஹா தேசிகன்

1968 ஆம்ஆண்டு ஸ்ரீரங்கநாத பாதுகா வித்யாலயா அறக்கட்டளை (SRPVT) ஸ்ரீரங்கம் ஸ்ரீமத்ஆண்டவன் ஆசிரமத்தின் (பெரியாஸ்ரமம்) சிஷ்யர்களால் நிறுவப்பட்டது.இது ஒரு பதிவு செய்யப்பட்ட சமூகத்தொண்டு கல்வி நிறுவனம் ஆகும்.இவ்அறக்கட்டளையின் கீழ் ஸ்ரீமத்ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகின்றது.




ஆச்சார்யன் ஸ்ரீரங்க ராமானுஜ மஹா தேசிகன்

1996 ஆம் ஆண்டு ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 11வது பீடாதிபதியான ஸ்ரீரங்க ராமானுஜ மகா தேசிகன் ஸ்வாமிகளால் ஸ்ரீமத்ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டது. இக்கல்லூரியானது மாண்புமிகு முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீஷங்கர் தயாள் சர்மா அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட பெருமையுடையது.




ஆச்சார்யன் ஸ்ரீவராஹ மஹா தேசிகன்

ஸ்ரீமத்ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தற்போதைய ஆச்சார்யா, ஆசிரமத்தின் 12 வதுபீடாதிபதி ஸ்ரீமத்ஆண்டவன் ஸ்ரீவராஹ மஹாதேசிகன் ஸ்வாமிகள் அதிக அர்ப்பணிப்புடன் ஒரு வழிகாட்டியாக கல்லூரியை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்கிறார்.

"அனைத்து ஆச்சார்யர்களுக்கும் எங்கள் வந்தனங்கள்!"